சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை எழுதிச்செல்கிறது - பிரமிள்

Friday, March 19, 2010

செல்வாக்கு மிக்கவர்கள் : மனுஷ்ய புத்திரன் & நக்கீரன் கோபால்

தேசிய அளவிலும் தமிழகத்திலும் தங்கள் துறைகளில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு தாக்கத்தை ஏற்படுத்திய செல்வாக்கும் மிக்கவர்களின் பட்டியைலை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது.

இப்பட்டியலில் கவிஞரும், உயிர்மை பத்திரிகை ஆசிரியர்-பதிப்பாளருமான மனுஷ்ய புத்திரன் மற்றும் நக்கீரன் ஆசிரியரும் பதிப்பாளருமான ஆர்.ஆர்.கோபால் இருவரும் முதன் முறையாக தேர்வு பெற்றுள்ளனர்.

பத்திரிகை & பதிப்பகம் சார்ந்து செயல்படுகிற இருவர் செல்வாக்கு மிக்கவராக அடையாளங் காணப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. தன்னுடைய கடும் முயற்சியினாலும், தளராத உழைப்பினாலும் இவ்விடத்தை பெற்றிருக்கும் மனுஷ்ய புத்திரன் மற்றும் நக்கீரன் கோபால் இருவருக்கும் அகநாழிகையின் வாழ்த்துகள்.


- பொன்.வாசுதேவன்


மனுஷ்ய புத்திரன்


நக்கீரன் கோபால்


10 பின்மொழிகள்:

நட்புடன் ஜமால் said...

மனுஷ்யபுத்திரனுக்கு வாழ்த்துகள்

அடுத்தவருக்கு ஏனோ சொல்ல தோனலை

நாய்க்குட்டி மனசு said...

மனுஷ்ய புத்திரனுக்கும், ஆர்.ஆர் .கோபாலுக்கும் வாழ்த்துக்கள் செல்வாக்கு மிக்கவர் பட்டியலில் வந்தமைக்கு.

நேசமித்ரன் said...

மனுஷ்யபுத்திரனுக்கு வாழ்த்துகள்

தண்டோரா ...... said...

மனுஷுக்கு வாழ்த்துக்கள்.. கோவாலுக்கு “வீரப்ப” சாபங்கள்...

karrupu said...

இந்தியாவில் பாராட்டுகளும், விருதுகளும்- தகுதியான நபருக்கு போய் சேருவதில்லை என்பது மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது.

ச.முத்துவேல் said...

எங்க மனசுல டாப்பா இருக்கிற மனுஷ்தான், தமிழ்நாடு அளவிலயும்னு சொன்னா அதுல சந்தோசம் எங்களுக்கும்தானே!

என்ன நாஞ்சொல்றது சரிதானே.

ஸ்ரீ said...

இருவருக்கும் வாழ்த்துகள்.

உயிரோடை said...

மானசீக குருக்கு வாழ்த்துகளும் மேலும் பல உயரங்களை சிகரங்களை எட்டவும் எமது விருப்பங்களும்

நாமக்கல் சிபி said...

மனுஷ்யபுத்திரனுக்கு வாழ்த்துகள்

அடுத்தவருக்கு சத்தியமா சொல்ல தோனலை

D.R.Ashok said...

அதான் ஜமாலும் சிபியும் சொல்லிட்டாங்களே... நான் வேற தனியா சொல்லனுமா....

Post a Comment

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...