Friday, August 21, 2009

தொடர் மழை




சிறு மழை பெரு மழை
அடை மழை இடி மழை
புயல் மழையென
அடிக்கடி பெய்து கொண்டுதானிருக்கிறது
உனக்கு எனக்கு எல்லோருக்குமாக

மழை பெய்வது குறித்து
கவலையோடும்
கவலையேதுமற்றும்
நனைந்து மகிழ்ந்தும்
கவனமாய் நனையாமலும்
சென்று கொண்டிருக்கின்றோம்
நீ நான் எல்லோரும்

உனக்கும் எனக்கும் எல்லோருக்கும்
சேருமிடமொன்று இருக்கின்றது

பிரிக்காத பரிசு போல்
இறுக்கிய கைகளுக்குள்
நனையாமல் பத்திரமாய்
என் விரல்களை எடுத்து
சென்று கொண்டிருக்கிறேன் நானும்.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

20 பின்மொழிகள்:

மிஸஸ்.தேவ் said...

//பிரிக்காத பரிசு போல்
இறுக்கிய கைகளுக்குள்
நனையாமல் பத்திரமாய்
என் விரல்களை எடுத்து
சென்று கொண்டிருக்கிறேன் நானும்.//


வார்த்தைகள் நல்லா இருக்கு,ஆனா கொஞ்சம் புரியலையே...!

ஹேமா said...

வாசு அண்ணா,நாம் விரும்பியோ விரும்பாமாமலோ வாழ்வை அது அடிக்கும் திசையிலே போகவேண்டித்தானே உள்ளது.

jerry eshananda. said...

தொடர் மழையின் தூவானமாய் என் சிறிய பின்னூட்டம்,,இறக்கைகள் விரித்து நனைய சொல்கிறது....மெல்ல நனைகிறேன்..கூடவே மனசும்.-"ஜெரி".

யாத்ரா said...

அழகான மழை தொடர் மழை

இறுக்கிய கைகளுக்குள் இருக்கும் நனையாத விரல்களை மிகவும் ரசித்தேன்.

தண்டோரா ...... said...

தூறலில் நனைந்த சுகம் வாசு...

பீர் | Peer said...

அண்மையில் வாசித்ததில் ரசித்த கவிதை, அருமை.

என்.விநாயகமுருகன் said...

//பிரிக்காத பரிசு போல்
இறுக்கிய கைகளுக்குள்
நனையாமல் பத்திரமாய்
என் விரல்களை எடுத்து
சென்று கொண்டிருக்கிறேன் நானும்

ரசித்தேன்

புலிகேசி said...

மழை என்னைக்குமே மறக்கமுடியாது

Nundhaa said...

தொடர்மழையும் நற்சித்திரமும் நன்றாக இருக்கின்றன வாசு

D.R.Ashok said...

’தொடர்மழை’ ’நற்சித்திரம்’ இரண்டும் நான் எழுதியதை போல உணர்ந்தேன்.
(தவறாக எண்ண வேண்டாம்)

குடந்தை அன்புமணி said...

நல்லாத்தான் போய்க்கிட்டிருந்திச்சு. ஆனா கடைசியிலே உங்க ட்ரேட் மார்க்கை வைச்சுப்பிட்டீங்களே...

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லா இருக்கு வாசு அண்ணா..
படமும் கவிதையும் இழைகிறது.

ஸ்ரீ said...

//பிரிக்காத பரிசு போல்
இறுக்கிய கைகளுக்குள்
நனையாமல் பத்திரமாய்
என் விரல்களை எடுத்து
சென்று கொண்டிருக்கிறேன் நானும்.//

அழகு.

ஆ.ஞானசேகரன் said...

உங்களுக்காண செய்தி என் பக்கம் வந்துவிட்டு செல்லுங்களேன்

அன்புடன் அருணா said...

மழையில் கையையும் கைவிரல்களையும் விரித்துக் கொணடு நனைபவள் நான்!

பட்டிக்காட்டான்.. said...

//.. மிஸஸ்.தேவ் said...

//பிரிக்காத பரிசு போல்
இறுக்கிய கைகளுக்குள்
நனையாமல் பத்திரமாய்
என் விரல்களை எடுத்து
சென்று கொண்டிருக்கிறேன் நானும்.//


வார்த்தைகள் நல்லா இருக்கு,ஆனா கொஞ்சம் புரியலையே...! ..//

எனக்கும் தான்..

இரசிகை said...

//பிரிக்காத பரிசு போல்
இறுக்கிய கைகளுக்குள்
நனையாமல் பத்திரமாய்
என் விரல்களை எடுத்து
சென்று கொண்டிருக்கிறேன் நானும்//

nalla uvamai...

kaikal korkka mudiyaatha yaekkaththin velippaadaakave unarkiren....:))

இரசிகை said...

//பிரிக்காத பரிசு போல்
இறுக்கிய கைகளுக்குள்
நனையாமல் பத்திரமாய்
என் விரல்களை எடுத்து
சென்று கொண்டிருக்கிறேன் நானும்//

nalla uvamai...

kaikal korkka mudiyaatha yaekkaththin velippaadaakave unarkiren....:))

இரசிகை said...

//பிரிக்காத பரிசு போல்
இறுக்கிய கைகளுக்குள்
நனையாமல் பத்திரமாய்
என் விரல்களை எடுத்து
சென்று கொண்டிருக்கிறேன் நானும்//

nalla uvamai...

kaikal korkka mudiyaatha yaekkaththin velippaadaakave unarkiren....:))

இரசிகை said...

//பிரிக்காத பரிசு போல்
இறுக்கிய கைகளுக்குள்
நனையாமல் பத்திரமாய்
என் விரல்களை எடுத்து
சென்று கொண்டிருக்கிறேன் நானும்//

nalla uvamai...

kaikal korkka mudiyaatha yaekkaththin velippaadaakave unarkiren....:))

Post a Comment

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...