சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை எழுதிச்செல்கிறது - பிரமிள்

Monday, September 1, 2008

நிழல் விலக்கிய திரை

விடிகிற இரவின்

ஒவ்வொரு பக்கங்களிலும்

ஆடாமல் காத்திருக்கிறது

எனக்கான ஊஞ்சல்

கண்களை பிடுங்கிஎறிந்ததைபோல்

தடுமாற வைக்கும்

இருட்டினுள்

விழி திறந்து மூடி

விளையாடும் அக்கணங்களில்

கட்டியணைத்து

ஆறுதல் பேசும் உன்னோடு

சுழன்று சென்று கொண்டிருக்கிறேன்

உச்சிக்கு

இருளிலும் இடைவிடாது

தொடரும் நிழலுடன்...